சுற்றுச்சூழல், காடு மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (கஒம), 2018, அறிவிப்பானது அதன் சில கடுமையான சட்ட விதிகளை நீக்கியிருக்கிறது. சுற்றுச்சூழல்ரீதியாக பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இது வரையிலும் இந்த சட்ட விதிகள் தடையாய் இருந்துவந்தன. கஒம எல்லைகளின் அளவு மற்றும் வளர்ச்சி இல்லாத மண்டலத்தின் எல்லைகள் குறைக்கப்பட்டிருப்பது மற்றும் மக்கள்தொகை அடர்த்தியின்படி கடலோர மண்டலப் பகுதிகளை வகைப்படுத்தல் ஆகியவை இந்தப் புதிய கொள்கையின் முக்கிய அம்சங்களாகும். ராணுவ மற்றும் பொதுமக்கள் பயன்பாடுகளுக்கான ‘’நீண்டகால திட்டங்களு’’க்கு கஒம 1-ன் கீழ்வரும் சுற்றுச்சூழல்ரீதியாக மிகவும் ஆபத்தான பகுதிகள் கூட விலக்களிக்கப்படவில்லை. மீனவர்களைப் பொறுத்தவரை, சுற்றுச்சூழல் நீதி மற்றும் விநியோக நீதியின் பார்வையில் புதிய கஓம விதி கூறுவது என்ன?
எளிதில் பாதிப்பிற்குள்ளாகும் நிலையிலிருக்கும் கடலோரப் பகுதிகளில் வர்த்தக மற்றும் தொழிற்துறைரீதியாக பெரும் திட்டங்களை அனுமதிப்பதன் மூலம் புதிய கஒம விதியானது இப்போதுள்ள மனித-சூழியல் சமநிலையை எதிர்மறையாக பாதிக்கும். இது கடல் சூழியலை மேலும் மோசமடையச்செய்வதுடன் கடல் வளத்தை நம்பியிருக்கும் மக்களை, குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வாழும் சிறு மீனவர்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும். உலகம் முழுவதிலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையானது ஏற்கனவே பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடல் மட்டம் உயர்வதன் காரணமாகவும், கடலோர அரிப்பின் காரணமாகவும் பெரும் ஆபத்திலிருக்கும் நிலையில் இந்தப் புதிய கொள்கை நடைமுறைக்கு வருகிறது. இந்தியாவின் மேற்கு கடற்கரையோரமும், ஆற்று கழிமுகங்களை ஒட்டியுள்ள பகுதிகளும் எளிதில் அதிகபட்சமாக பாதிக்கப்படும் நிலையிலுள்ள பகுதிகள் என்று அறியப்பட்டவை. அப்படியெனில் யாருடைய நலன்களுக்காக இந்த புதிய அறிவிக்கை?
Comments
EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.