ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

மாலத்தீவுகளில் தலையீடு

இந்தியப் பெருங்கடலை தங்களது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவருவதுதான் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நீண்ட கால திட்டமாகத் தோன்றுகிறது.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

கடந்த ஒரு மாத காலமாக அரசியல் நெருக்கடியில் சிக்கியிருக்கும் மாலத்தீவுகளில் அங்குள்ள மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பற்றி இந்தியாவும் அமெரிக்காவும் கவலை கொண்டுள்ளன என்று நம்புவதற்கு ஒருவர் அரசியலை அறியாதவராக இருக்க வேண்டும். இந்தியப் பெருங்கடலில் இருக்கு இந்தத் தீவுகள் கூட்டத்திற்கு அருகேதான் பல கப்பல் பாதைகள் இருக்கின்றன. இவற்றின் வழியாகத்தான் இந்தியா, ஜப்பான், சீனா, மற்றும் பிற கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குத் தேவையான எண்ணை எடுத்துச்செல்லப்படுவதுடன் இந்த நாடுகளில் உற்பத்தியாகும் ஏற்றுமதிப் பொருட்கள் மேற்காசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு எடுத்துச்செல்லப்படுகின்றன. மாலத்தீவுகளை தனது கொல்லைப்புறமாக நினைக்கிறது இந்தியா. ஆனால், புது டெல்லி மற்றும் வாஷிங்டன்னின் விருப்பத்திற்கு மாறாக சீனாவின் ஒரு பட்டை ஒரு பாதை திட்டத்தில் (பட்டுப் பாதை திட்டம்) மாலத்தீவுகள் பங்கேற்க முடிவு செய்ததுடன் சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தையும் ஏற்படுத்திக்கொண்டது.

பிப்ரவரி 5ஆம் தேதி மாலத்தீவுகள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் 15 நாள் நெருக்கடிநிலையை அறிவித்து ஜனநாயக உரிமைகளை தாற்காலிகமாக நிறுத்திவைத்தார். அத்துடன், முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் உட்பட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை, தலைவர்களை விடுதலை செய்ய வேண்டுமென பிப்ரவரி 1ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவரையும் கைது செய்தார். அடுத்த நாளே, இந்தியா ராணுவ ரீதியாக தலையிட வேண்டும், இந்தியாவும் அமெரிக்காவும் யாமீனை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டுமென இலங்கையில் தஞ்சம் புகுந்திருந்த நஷீத் அறிக்கை வெளியிட்டார். நீதிமன்றத்தின் ஆதரவு தனக்கிருக்கிறது என்று யாமீன் நம்பிக்கொண்டிருக்கையில் உச்ச நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு அவருக்கு அதிர்ச்சி தந்திருக்க வேண்டும். எதிர்க்கட்சியினருக்கு இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் ஆதரவு இருந்த காரணத்தால் நீதிபதிகளும் தீவிரமான நெருக்கடிக்கு ஆளாகியிருக்க வேண்டும். தனது கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டதால் யாமீனின் அரசாங்கம் கவிழ்ந்திருக்கும், இந்த ஆண்டு நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நஷீத் முக்கியமான வேட்பாளர்களுள் ஒருவராக இருந்திருப்பார். ஆகவே நெருக்கடிநிலையை அறிவித்து மீதமுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்டு தீர்ப்பை மாற்றச் செய்தார் நஷீத்.

Dear Reader,

To continue reading, become a subscriber.

Explore our attractive subscription offers.

Click here

Or

To gain instant access to this article (download).

Pay INR 50.00

(Readers in India)

Pay $ 6.00

(Readers outside India)

Back to Top